யாழில் வீதியோர மரத்தடியில் பாடசாலை மாணவியின் சீருடை மீட்பு

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கும் புல்லுக்குளத்திற்குமிடையில்  வீதியோரமாக உள்ள மரத்தடியில் இருந்து பாடசாலை மாணவி ஒருவரின் சீருடை உட்பட சில உடமைகளை பொலிஸார் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட உடமைகள் அச்சுவேலி இடைக்காடு மகா வித்தியாலய மாணவி ஒருவருடையது என்றும், சீருடை, உள்ளாடைகள், பாடசாலை கழுத்து பட்டி, செருப்பு, உட்பட சில உடமைகள் மீட்கப்பட்டுள்ளது என யாழ். பொலிஸ் நிலைய தடயவியல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.